டெல்லி: ஃபானி புயலால் உருக்குலைந்த ஒடிசா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் மோடி விவரம் கேட்டறிந்தார். புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் ஒடிசா அரசுக்கு தேவையான ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்கும் என்று மோடி கூறியுள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மக்களுடன் இந்திய நாடே துணை நிற்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி