திராவகத்தை முகத்தில் ஊற்றியது போன்ற எரிச்சலை மக்கள் உணர்ந்தனர். பகலில் அனல் காற்று வீசியது. இது தவிர சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 108 டிகிரியும், மதுரை 106 டிகிரி, கடலூர், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, திருச்சி ஆகிய இடங்களில் 104 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பகலில் வெளியில் செல்லவே மக்கள் அச்சப்பட்டனர். இந்நிலையில், வங்கக் கடலில் ஒரு வாரமாக மெல்ல நகர்ந்த பானி புயல் நேற்று மதியம் 12. 30 மணி அளவில் ஒடிசாவில் பூரி அருகே கரை கடந்து சென்றதால், ஈரப்பதம் உறிஞ்சப்பட்டது. அதனாலும் காற்றின் வெப்பம் அதிகமாக இருந்தது. வரும் 26 நாட்களுக்கும் வெயிலின் தாக்கம் இதே அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.