×

‘பானி’ குழந்தை

ஒடிசா கடற்பகுதியில் நேற்று காலை புயல் தாக்கியபோது தலைநகர் புவனேஸ்வர் அருகேயுள்ள மான்செஷ்வாரில் உள்ள ரயில்வே மருத்துவமனையும் புயலால் சேதமடைந்தது. அப்போது, காலை 11.03 மணிக்கு அங்குள்ள ரயில் பெட்டி சீரமைக்கும் பணிமனையில் வேலை செய்யும் உதவியாளரின் மனைவிக்கு ரயில்வே மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர். இந்நிலையில், பானி புயல் தாக்கியபோது பிறந்த அந்த குழந்தையை `பெண் பானி’ என டாக்டர்கள் அழைக்கின்றனர். அந்த தாய்க்கு பிறந்த முதல் குழந்தை அது. புயல் தாக்கியதில் மருத்துவமனை சேதமடைந்த நிலையில் கூட குழந்தை பாதிப்பு இன்றி பிறந்தது. பானி என்றால் பாம்பு அல்லது பாம்பு உடை என்பது பொருளாம். இந்த வார்த்தையை வங்கதேசம் உருவாக்கியதாக இந்திய வானிலைத் துறை கூடுதல் இயக்குனர் மிருன்செய் முகப்பத்ரா தெரிவித்தார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bani ,baby , fani storm, fani baby
× RELATED பச்சிளம் ஆண் குழந்தை கொல்லப்பட்ட...