×

குச்சிப்பாளையம் கிராமத்தை சூறையாடிய வன்முறை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குச்சிப்பாளையம் கிராமத்தின் மீது, அருகிலுள்ள மேல்கவரப்பட்டு காலனியைச் சேர்ந்த கும்பல் ஆயுதங்களுடன் படையெடுத்துச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த வன்னியர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. குச்சிப்பாளையம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார், அதற்கான காரணம் என்ன என்பதை வெளிப்படையாக விளக்க வேண்டும். குச்சிப்பாளையம் வன்னியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்க வேண்டும். இதற்கு காரணமான கும்பலை தண்டிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramadoss ,village ,Kuchipalayam , Action should be taken , mob violence that robbed
× RELATED மக்களவை தேர்தலுக்கான பாமகவின்...