×

இவ்வளவு விவரமில்லாதவராக எடப்பாடி இருப்பார் என நினைக்கவில்லை : துரைமுருகன் அறிக்கை

சென்னை : ‘முதல்வர் இவ்வளவு விவரம் அற்றவராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அத்தனையும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’ என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சூலூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் என்னைப் பற்றி ஆத்திரத்தில் புளுகு மூட்டைகளை கொட்டியுள்ளார். இதைப் பார்த்து பரிதாபப்படுவதா, சிரிப்பதா அல்லது ஆத்திரப்படுவதா என்றே தெரியவில்லை. எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டதாகவும். இவ்வளவு பணம் எந்தவகையில் வந்தது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதுதான் எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி கண்டுபிடித்து கூறிய அரிய, பெரிய கருத்து.

முதல்வர் இவ்வளவு விவரமற்றவராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அத்தனையும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். எங்களுடைய வீடு - கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டபோது, அவர்கள் எடுத்துச் சென்றது 10 லட்சம் ரூபாய் மட்டுமே. அவர் கூற்றுப்படி, 13 கோடி ரூபாய் அல்ல. ரூ.13 கோடி எடுத்த இடமும் எங்களுக்கு உரியது அல்ல.
இந்த சோதனையில் எங்கும் தங்கம் கைப்பற்றப்படவில்லை. இதுதான் உண்மை. வருமான வரித்துறையினர் கொடுத்துள்ள பஞ்சன் நாமாவைப் பார்த்தாலே இது தெரியும். எல்லாவற்றையும் அறிந்து கொள்ளக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கின்ற முதலமைச்சர் பழனிசாமி, ஏதும் தெரியாத சராசரி மனிதனை போல் பேசியிருப்பது கேலிக்குரியதாகும். எங்களுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கத்தையும்; 13 கோடி ரூபாயையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதல்வர் நிரூபித்தால், நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன். இல்லாவிட்டால், முதலமைச்சர் பழனிசாமி, தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா? பாவம்.. அவரென்ன ராஜினாமா செய்வது. மக்கள்தான் அவரை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டார்களே. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Duramurugan , I do not think ,he will be so untidy, Duramurugan report
× RELATED திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி