டெல்லி: டெல்லியில் பெண் டாக்டர் கரிமா மிஸ்ரா கொலை வழக்கில் அவரது நண்பரான மற்றொரு டாக்டர் சந்திர பிரகாஷ் வர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 25 வயது மதிக்கதக்க பெண் டாக்டர் கரிமா மிஸ்ரா டெல்லியில் ரஞ்சீத் நகரில் வசித்தபடி மருத்துவ மேற்படிக்குக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில் கரிமா மிஸ்ரா கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தக் குடியிருப்பில் கரிமா மிஸ்ரா, சந்திர பிரகாஷ் வர்மா மற்றும் அவரது மற்றொரு நண்பர் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் முதல் வசித்து வந்தனர்.
கரிமா கொலை செய்யப்பட்டிருந்தப் போது அவருடன் தங்கியிருந்த மற்றொரு நண்பர் வீட்டில் இருந்தார். ஆனால் சந்திர பிரகாஷ் வர்மாவை காணவில்லை. அவரை இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் சந்திர பிரகாஷ் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
ஏற்கெனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு கரிமாவிற்கும் சந்திர பிரகாஷ் வர்மாவிற்கும் பிரச்னை ஏற்பட்டு பின்னர் சமாதானமாக சென்றுள்ளனர். இருவரும் டெல்லியுள்ள அரசு மருத்துவமனையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். கடந்த மாதம் தான் கரிமா தனது மேற்படிப்பிற்காக வேலையை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி