இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் மீதான தேசத் துரோக வழக்கு விசாரணை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரப்.
இவர், பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு கடந்த 1999ல் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2008 வரை அதிபராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் முந்தைய பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் மீது கடந்த 2013ம் ஆண்டு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த முஷாரஃப், மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார். இதுவரை அவர் நாடு திரும்பாத நிலையில், இந்த வழக்கு பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முஷாரஃப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரம்ஜான் பண்டிகை முடியும் வரை அதாவது ஜூன் 4 வரை தன் மீதான தேசத் துரோக வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று முஷாரஃப் கேட்டு கொண்டதாகவும் அதே சமயம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகததிற்கு மன்னிப்பு கோரியதாகவும் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தஹிரா சப்தர், நாசர் அக்பர் மற்றும் ஷாஹித் கரீம் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி