×

மாமல்லபுரத்தில் பரபரப்பு வானில் சூரியனை சுற்றி தோன்றிய கருவளையம்

சென்னை: கடந்த 3 நாட்களாக அச்சுறுத்தி வந்த பானி புயல்  தமிழகத்தை விட்டு நகர்ந்து ஆந்திரா வழியாக ஒடிசா கடற்கரையை நோக்கி சென்றது. புயல் காரணமாக அதிக வெயில், புழுக்கம், அனல் காற்று  போன்றவற்றால் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.  இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக நேற்று பகல் 12 மணியளவில் சூரியனை சுற்றி  கருவளையம் தோன்றியது. வளையல் போன்ற தோற்றத்தில் காணப்பட்ட இந்த வளையம்  இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதிகளில்  தென்பட்டது.  மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த பலரும் கடலோரத்தில் நின்றபடி  இந்த கரு வளையத்தை தங்களது செல்போனிலும், கேமராவிலும் படம் பிடித்தனர்.  இவ்வாறு வானில் அடிக்கடி மாற்றங்கள் உருவாவது இயற்கைதான் என வானியல்  ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mamallapuram ,sky , Mammalapuram, the curtain around the sun
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ