×

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண் எடுத்து மாணவிகள் முதலிடம்

புதுடெல்லி:  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு கடந்த பிப்ரவரி 16ம் தேதி தொடங்கி நடந்தது. நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்றனர். வழக்கமாக மே 3வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்தாண்டு முன்கூட்டியே தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தை சேர்ந்த மாணவி ஹன்சிகா சுக்லாவும், முசாபர்நகரை சேர்ந்த கரீஷ்மா அரோராவும் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். ரிஷிகேசை சேர்ந்த கவுராங்கி சாவ்லா, ரேபரேலியை சேர்ந்த ஐஸ்வர்யா மற்றும் ஜிந்த்தை சேர்ந்த பாவ்யா ஆகியோர் 498 மதிப்பெண் 2வது இடத்தை பிடித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த நீரஜ் ஜிண்டால், மேஹாக் தல்வார் உட்பட 18 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBSE ,examination ,girls , CBSE, 12th, 499 mark, Girls topped
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...