×

தமிழகத்தில் ஜாதி, மத சண்டைகள் இல்லை: திருப்பரங்குன்றம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று, சிலைமான் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. ஜாதி, மத சண்டைகள் இல்லை. தேர்தல் முடிந்ததும், நீதிமன்ற தடையை நீக்கி ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஜெயலலிதா விண்ணில் இருந்து எங்களது செயல்பாடுகளை பார்த்துக் கொண்டு வருகிறார். அந்த பயத்தில்தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்து, ஜெயலலிதாவை காப்பாற்றாத பாவிகள் தனி இயக்கமாக செயல்படுகின்றனர். டிடிவி.தினகரன் தனது வேட்பாளரை ஆதரித்து இந்த தொகுதியில் பிரசாரம் செய்திருக்கிறார். வெளியூர்களிலிருந்து ஆட்களை இங்கு அழைத்து வந்து பிரசாரம் செய்கிறார். ஆனால் நமது பிரசாரத்தில் உள்ளூர்க்காரர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fights ,Tamil Nadu ,constituency , Tamilnadu, Caste, Religious Fight, No, Thiruparankundam Block, O.Panniriselvam
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...