×

ஃபானி புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையம் இரவு 9.30 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மூடல்

கொல்கத்தா: ஃபானி புயல் எதிரொலி காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று இரவு 9.30 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை முடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை ஒடிஷா மாநிலம் புவனேஸ்வருக்கு இயக்கவிருந்த அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வரில் இருந்து வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களையும் ரத்து செய்வதாக கோ ஏர் நிறுவனமும் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையம் முடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fanny ,airport ,Kolkata , Fani Storm, Kolkata Airport, Closure
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...