×

ஓட்டு போடுபவர்கள் கொல்லப்படுவார்கள்: காஷ்மீரில் மிரட்டல் போஸ்டர்களை ஒட்டிய பயங்கரவாதிகள்!

சோபியான்: மக்களவை தேர்தலில் ஓட்டு போடுபவர்கள் கொல்லப்படுவார்கள் என்று காஷ்மீரில் மிரட்டல் போஸ்டர்களை பயங்கரவாதிகள் ஒட்டியுள்ளனர். காஷ்மீரின் சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் மே 6ம் தேதி 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பல பகுதிகளில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. உருது மொழியில் அச்சிடப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் சுவர்களிலும் மின் கம்பிகளிலும் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், ராணுவத்தினர் உங்களை வாக்களிக்கும்படி கட்டாயப்படுத்துவார்கள் என்று எங்களுக்கு தகவல் உண்டு. ஆனால் அனைவரும் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போடுபவர்கள் கொல்லப்படுவார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ராணுவ பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது. எங்கள் தளபதி ரியாஸ் நைகோ, இந்தியக் கட்சிகளிடமிருந்து விலகிச் செல்லுமாறும், வாக்களிக்க கூடாது என்றும் உங்களிடம் பலமுறை மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். ஆனால், சிலர் அதனை கேட்காமல் இருக்கிறார்கள். தற்போது உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. இனி ஓட்டளிக்க செல்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். அந்த வீடியோ பொதுவெளியில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் யாரால் ஒட்டப்பட்டுள்ளது என்று சரியாக சொல்ல முடியாவி்ட்டாலும், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு சார்பில் ஒட்டப்படிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், வாக்காளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Terrorists ,Kashmir , Kashmir, Vote, Terrorists, Poster, Election, Hizbul Mujahideen
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...