×

சேலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் பிரபல ரவுடி சுட்டுக் கொலை

சேலம்: சேலத்தில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். சேலத்தை அடுத்த காரிபட்டியை சேர்ந்த ரவுடி கதிர்வேலை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். சேலம் உதவி காவல் ஆணையரை தாக்கியதால் ரவுடி கதிர்வேல் என்கவுண்டர் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது.

கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த ரவுடி கதிர்வேலை கைது செய்ய சென்ற போது, அவர் போலீசாரை தாக்கியதால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்ய வந்த போலீசாரை கத்தியால் ரவுடி குத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தியை வைத்து தாக்கியதால் தற்காப்புக்காக என்கவுண்டர் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டரை தொடர்ந்து தப்பி ஓடிய மூன்று ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : killer ,encounter ,Rowdy ,Salem , Salem, Police, Encounter, Rowdy, shot dead
× RELATED சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர்...