டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழு முன் மூடப்பட்ட அறையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்விகளுக்கு பதில் அளித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனக்கு பாலியல் தொல்லை தந்தார் என பெண் ஒருவர் புகார் தந்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி