×

தமிழகத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மதுரை : தமிழகத்தில் நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் சிக்கி 4 பேர் பலியாயினர். மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் பாதயாத்திரை சென்ற துறவிகள் பின் வந்த ஜீப் மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. சுற்றுலா பேருந்து வேகமாக இடித்ததில் ஜீப், ஜெயின்மத துறவிகள் மீது மோதியது. இந்த விபத்தில் சாத்வி (45), பிரியதர்ஷிகா (52) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மஞ்சுளா (68), மிருதுரஞ்சனா(56). சமயதேமிஷா(35) ஆகிய 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

வேலூர் அருகே சாலை விபத்து : இருவர் பலி

வேலூர் வாலாஜாபேட்டை அடுத்த ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் மோதியதில் கோபி, ராமு ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கார் ஓட்டுனர் ராஜா என்பவர் படுகாயங்களுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : deaths ,road accident ,Tamil Nadu , Four deaths, road accident , Tamil Nadu
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...