×

மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் கைதான 2 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னை அடுத்த காஞ்சிபுரம், எண்ணெய்க்கார தெருவை  சேர்ந்த 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை 4 பேர் ஆட்டோவில் கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர்.இதுதொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருக்காலிமேட்டை சேர்ந்த ராஜா (30), பிள்ளையார்பாளையம் தேவா (27) ஆகியோரை போக்சோ சட்டத்தில் கடந்த மாதம் 1ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான ராஜா மற்றும் தேவா  மீது காஞ்சிபுரத்தில் மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்படி விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் கேட்டுக்கொண்டார்.இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசுப்ரமணியன், எஸ்பி சந்தோஷ் ஹதிமணி பரிந்துரையின்பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டர்  பொன்னையா உத்தரவிட்டார். அதன்படி வேலூர் சிறையில் இருக்கும் ராஜா மற்றும் தேவாவிடம் இந்த உத்தரவை விஷ்ணு காஞ்சி போலீசார் வழங்கினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : detainee detainee , Mentally, girl, Kundas , detainee
× RELATED திருட்டு வழக்கில் கைதான கைதி கைவிலங்குடன் தப்பியோட்டம்