×

ஒகேனக்கல் வனப்பகுதியில் பெரும் பரபரப்பு மாணவியிடம் பலாத்கார முயற்சி தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை: 4 பேர் கும்பல் வெறிச்செயல்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த தொப்பூரை சேர்ந்த முனுசாமி (25) என்பவர், கோடை விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்த  ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த உறவினர் மகளான 10ம் வகுப்பு மாணவியை  அழைத்துக் கொண்டு, நேற்று காலை பைக்கில் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளார். அங்கு அருவியில் குளித்துள்ளனர். மாலை 4 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வழியில், ஒகேனக்கல்லில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள பண்ணப்பட்டியில், சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்குள், மாணவியுடன் அவர் செல்வதை நோட்டமிட்ட 4 பேர் கொண்ட கும்பல், அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். சுமார் 200 அடி உள்ளே வனப்பகுதிக்குள் சென்றபோது, முனுசாமியை தடுத்து நிறுத்திய அந்த கும்பல், மாணவியிடம் அத்துமீறி நடக்க முயன்றது. இதை தடுக்க முயன்ற முனுசாமியை, அந்த கும்பல் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டது. இதில், மார்பு, இடுப்பு உள்ளிட்ட 4 இடங்களில் குண்டு பாய்ந்த முனுசாமி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, அலறியபடி சாலையை நோக்கி ஓட்டம் பிடித்தார். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் பின்தொடர்ந்து விரட்டியது. சுற்றுலா பயணிகள் சிலர், மாணவி ஓடி வந்ததைக்கண்டு, வாகனங்களை நிறுத்தி அவரிடம் விசாரித்தனர். அப்போது, நடந்த சம்பவம் குறித்து கண்ணீருடன் தெரிவித்தார். இதையடுத்து, அவரை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் சென்றனர்.

இதை கண்ட மர்ம கும்பல், அங்கிருந்து தப்பியது. அங்கு முனுசாமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக ஒகேனக்கல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், சுற்றுலா பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gangster ,Hogenakkal ,forest area , Hogenakkal Forest, Student, Force, Attempt, Witch
× RELATED நில மோசடி தொடர்பாக கவுதமி அளித்த...