×

கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்,.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முடிவு

சென்னை:  கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்  பெற்றுள்ளனர். ஊழியர்களுடன் தொழிலாளர் நலத்துறை, மெட்ரோ நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு  ஏற்பட்டுள்ளதால் போராட்டம் வாபஸ் பெற்றுள்ளனர். ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புவார்கள் என்றும் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

* முன்னதாக மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்தின் போது ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குள் அத்துமீறி நுழைந்து சிக்னல் சேவையை துண்டித்ததாக 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் ஊழியர்கள் மனோகரன், பிரேம்குமார், சிந்தியாரோஷன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரயில் ஊழியர் வேலைநிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பின்னைடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை குறளகத்தில் 3 மணி நேரம் நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவரும் பேச்சுவாத்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

*  சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 8 மெட்ரோ ரயில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மெட்ரோ ரயில் ஓட்டுநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : strike ,Metro Rail , Metro train staff, strike, withdraw
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து