×

செங்கல்பட்டு வழிப்பறி கொள்ளையில் புகைப்படம் வெளியீடு: கொள்ளையன் பற்றி துப்பு தருபவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு அருகே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாக நடித்து 11 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த கொள்ளையனின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தொழிலதிபர் தயாநிதி, கிரன்ஷா ஆகியோரை குறிவைத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வழிப்பறி நடந்தது. மதுரையில் நடைபெற்ற நகைக்காட்சிக்காக, நகைகளைக் கொண்டு சென்றுவிட்டு கிரண்ராவின் மேலாளர் தயாநிதி திரும்பிக் கொண்டிருந்த போது கொள்ளைக் கும்பல் வழி மறித்த தங்களை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு 130 சவரன் தங்க நகைகள், பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் டிஷர்ட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். கொள்ளையன் தொடர்பாக தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengalpattu Driver ,pundits , Sandalwood ladders, looting, photo release
× RELATED பண்டிட்டுகளுக்காக புதிய 10 சிறப்பு...