×

மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு

மும்பை: மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கான 4வது கட்ட வாக்கு பதிவு மகாராஷ்டிராவில் நடந்து முடிந்தது. இதனையடுத்து அதிரடிப்படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த சி60 என்ற கமாண்டோ பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒரு பேருந்து வாகனத்தில் கட்சிரோளி பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கமாண்டோ படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு வீசி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 16 வீரர்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து தற்போது இதில் 16 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வாகன டிரைவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoists ,soldiers ,Maratha , Gaddiroli, Maoists, Bomb Attack, Action Force
× RELATED வயநாடு தொகுதி மக்களை...