×

பொள்ளாச்சி அருகே கருக்கலைப்பு ஊசி போட்டதில் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்: போலி மருத்துவர் முத்துலட்சுமி கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கருக்கலைப்பு ஊசி போட்டதில் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் போலி மருத்துவர் முத்துலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர்  கர்ப்பிணி வனிதா என்பவர் கடந்த 29-ம் தேதி காலை பொள்ளாச்சி நகரில், சித்த மருத்துவர் முத்துலட்சுமியை சந்தித்து கருவைக் கலைக்கும்படி நாடியுள்ளார். இதையடுத்து சித்த மருத்துவர் முத்துலட்சுமி, வனிதாவுக்கு அதை நாளில் காலை கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளார். இந்நிலையில் அன்று மாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட வனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே கர்ப்பிணி உயிரிழந்த தகவலை அறிந்த முத்துலட்சுமி தலைமறைவானார். இந்நிலையில் போலி மருத்துவர் முத்துலட்சுமியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi , Pollachi, abortion injection, fake doctor, Muthulakshmi arrested
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!