×

சோளிங்கர் அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் உடல் கருகி சிறுவன் பலி: வாலிபர் கவலைக்கிடம்

சோளிங்கர்: சோளிங்கர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவன் இறந்தான். மற்றொரு வாலிபர் கவலைக்கிடமாக உள்ளார்.வேலூர் மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் சசிகுமார்(33). இவருக்கு சோளிங்கர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில்  வாலாஜாவை சேர்ந்த சரவணன்(21) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பட்டாசு வெடி மருந்துகளை குடோனில் இறக்குவதற்காக சரவணன்  சென்றார்.

அப்போது அவரது நண்பர் சதீஷை (16) உதவிக்காக அழைத்துச் சென்றார். இருவரும்  பட்டாசு வெடி மருந்து பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது  சதீஷ் வெடி மருந்துபெட்டியை வேகமாக வைத்துள்ளார். இதில் ஏற்பட்ட உராய்வில்  வெடிபொருட்கள் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ்  உடல் கருகி இறந்தார். சரவணன் படுகாயத்துடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிந்து பட்டாசு ஆலை  உரிமையாளர் சசிகுமாரிடம் விசாரித்து  வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cracker crackdown ,Sholingar , Sholingar, crackdown,
× RELATED சோளிங்கர் அருகே சிலிண்டர் வெடித்த...