×

சிஆர்பிஎப் பாதுகாப்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடிதம்

அமராவதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாய் ரெட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில்  அரோராவுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.அதில், ‘வாக்கு எண்ணிக்கை நாளில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதைத் தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு  பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை ஈடுபடுத்த வேண்டும். மேலும், தெலுங்கு தேசம் கட்சியினரால் தேர்தல் அதிகாரிகள்  மிரட்டப்படுவதை தவிர்க்க, வாக்கு  எண்ணிக்கையை தேர்தல் பொது பார்வையாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CRPF ,YSR Congress , CRPF , YSR, Congress ,letter
× RELATED போதைப்பொருள் கடத்தலில் பாஜ, தெலுங்கு...