×

தமிழகம் முழுவதும் 290 நீதிபதிகள் அதிரடி மாற்றம்: உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 27 மாவட்ட நீதிபதிகள், 82 சீனியர் சிட்டி சிவில் நீதிபதிகள், 181 சிவில் நீதிபதிகள் என 290 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:சென்னையில் காலியாக உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற தலைமை நீதிபதியாக விழுப்புரம் மாவட்ட நீதிபதி சரோஜினி தேவி,  6வது கூடுதல் சிட்டி சிவில்  நீதிபதியாக ஈரோடு கூடுதல் நீதிபதியாக இருந்த ஆனந்த்,  7வது கூடுதல் சிட்டி சிவில் நீதிபதியாக பரமக்குடி கூடுதல் நீதிபதி அனில்குமார், 15வது கூடுதல் சிட்டி சிவில்  நீதிபதியாக, சிவகங்கை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் உட்பட 27 மாவட்ட நீதிபதிகள் தமிழகம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல், சென்னையில்,  எழும்பூர் 2வது பெருநகர மாஜிஸ்திரேட்டாக கோபிநாத், 9வது சிட்டி சிவில் நீதிபதியாக பாக்கிய ஜோதி, எழும்பூர் ஏசிஎம்எம்-ஆக ரவி, 10வது  சிட்டி சிவில் நீதிபதியாக அமுதா, 11வது சிட்டி சிவில் நீதிபதியாக அருள்மொழிசெல்வி, 12வது சிட்டி சிவில் நீதிபதியாக வித்யா, 6வது சிறுவழக்குகள் நீதிமன்ற நீதிபதியாக  சுதா, 16வது சிட்டி சிவில் நீதிபதியாக மோகனா, 18வது சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதியாக மணிமேகலை, 3வது சிட்டி சிவில் நீதிபதியாக விஜயராணி, 4வது சிட்டி சிவில்  நீதிபதியாக ஆப்ரகாம் லிங்கன், 5வது சிட்டி சிவில் நீதிபதியாக அப்துல் மாலிக், 6வது சிட்டி சிவில் நீதிபதியாக சுவாமிநாதன், 7வது சிட்டி சிவில் நீதிபதியாக கணபதிசாமி,  17வது சிட்டி சிவில் நீதிபதியாக சுரேஷ், 18வது சிட்டி சிவில் நீதிபதியாக சசிகலா, 9வது சிட்டி சிவில் நீதிபதியாக பிரபாகரன், 4வது சிட்டி சிவில் நீதிபதியாக சிவகுமார்  உட்பட தமிழகம் முழுவதும் 87 சீனியர் சிவில் நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் மாநிலம் முழுவதும் 181 மாஜிஸ்திரேட்கள் (சிவில் நீதிபதிகள்) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : judges ,Tamil Nadu ,registrar orders ,High Court , Across Tamilnadu, 290 Judges, Transformed
× RELATED சென்னை, மதுரை உள்பட தமிழ்நாடு...