×

கேரளாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய கேரள இளைஞரை அதிரடியாக கைது செய்தது என்.ஐ.ஏ. அமைப்பு

திருவனந்தபுரம் : இலங்கையில் நடத்தப்பட்டதை போன்று கேரளாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக இளைஞர் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான ரியாஸ் அபூபக்கர் என்ற இளைஞர் ஐஎஸ் அமைப்பினரோடு தொடர்பில் இருந்தார் என்பது குற்றச் சாட்டாகும். கேரள மாநிலம் காஸர்கோட்டைச் சேர்ந்த அபூபக்கர் மற்றும் அகமது ஆகியோரிடம் பயங்கரவாத தொடர்பு குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு இந்தியாவில் இருந்து யாரேனும் உதவினார்களா என்ற கோணத்தில் என்ஐஏ அமைப்பினர் விசாரணை நடத்தினர். இதில் கேரளத்தில் சிலருக்கு பயங்கரவாதி ஜகரான் ஷமியுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு காஸர்கோட்டு மாவட்டத்தில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் 15 பேர் இணைந்தது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களில் சிலருடன் இளைஞர் ரியாஸ் ஆன்லைன் மூலம் தொடர்பில் இருந்தார் என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இலங்கையில் ஈஸ்டர் நாளன்று நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவரின் வீடியோக்களை அதிகம் பார்த்து வந்துள்ளார் அந்த ரியாஸ். அதே போன்று கேரளாவிலும் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கைதாகியுள்ள அந்த இளைஞர் இலங்கையைச் சேர்ந்த ஜக்ராம் ஹாசிம் மற்றும் மத போதகர் சாஹீர் நாயக்கின் பேச்சுக்களால் கவரப்பட்டவர் என்றும் புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே ரியாஸ் கொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : conspirator ,Kerala ,Kerala Police ,suicide attack , Sri Lanka, Kerala, suicide, attack, national intelligence agency, arrested
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...