×

ஆலங்குளம் அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்புலியூத்து என்ற இடத்தில் லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கைக்குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலியில் இருந்து இன்று அதிகாலை குற்றாலம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார் கரும்புலியூத்து அருகே சென்று கொண்டிருந்த போது தென்காசியில் இருந்து எதிரே சரக்கு லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் லாரியில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்தவுடன் லாரி டிரைவர் தப்பியோடியுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry ,Alangulam ,collision , Nellai, Alangulam, car, truck, accident, death, road accident
× RELATED தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோகம்; ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி