×

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை

மதுரை: இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 221 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் இறுதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் 4 தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஒட்டபிடாரத்தில் தேர்தல் பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வழவழைக்கப்பட்டுள்ளனர். இதே போல் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் களைகட்ட தொடங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : by-elections , Aravakurichi, Tiruparankundram, Ottapidaram, Sulur, by-elections, nomination
× RELATED ராஜஸ்தான் இடைத்தேர்தலில் 70% வாக்குப்பதிவு