×

ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி இணைந்த கட்டண மீட்டர்களை பொருத்தக்கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்களை  பொருத்த கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த மீட்டரைப் பொருத்துவது  தொடர்பாக கடந்த  2013ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.இதுதொடர்பாக 2014ல் அரசாணை வெளியிடப்பட்டது.அதில், 6 ஆண்டுகளுக்க  முன்பு பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணை அமலுக்கு வரவில்லை. இதையடுத்து, இந்த அரசாணையை அமல்படுத்தக்கோரி ராஹத் பாதுகாப்பு சமுதாய அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் சுரேந்தர்குமார் ஐகோர்ட்டில் வழக்கு  தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த திட்டம் முழுமையாக   அமல்படுத்தப்படாததால் பயணிகள் பாதுகாப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Includes ,GPS, autos,Tamil Nadu ,government
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...