×

பாலகோட் தாக்குதலுக்கு பழி தீர்க்க இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் திட்டத்தை அரங்கேற்ற, பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதிகள் திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீரின் புல்வாமாவில் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து, பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

இதில் சுமார் 300 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு பழிக்குப்பழி வாங்க பாகிஸ்தான் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்ற ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதிகள், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் இணைந்து திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிகை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் இப்போது நேரடியாக தங்கள் செயல்களை செய்வது ஆபத்து என்பதாலும், உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானை கண்காணித்துக் கொண்டிருப்பதாலும், மாற்று திட்டத்தை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வடிவமைத்துள்ளது. இதன்படி, ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதற்கான ஏற்பாட்டை ஐஎஸ்ஐ செய்துள்ளதாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தின்போது, புல்வாமா தாக்குதலை போன்று மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலை இந்தியாவில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று உளவுத்துறை கூறியுள்ளது. இதனடிப்படையில், மாநிலங்களில்   பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : terrorists ,Pakistani ,terror attack ,India , Balakot attack, blame, terror attack, Pakistani terrorist, plan, intelligence, alert
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...