×

ஒரத்தநாடு அருகே 17 வயது பெண்ணின் குழந்தைக்கு தந்தை யார் என்பதில் குழப்பம்: 90 நாள் சிறையில் இருந்த அப்பாவி இளைஞர் மற்றொருவரை கைது செய்து டிஎன்ஏ டெஸ்ட்

ஒரத்தநாடு: திருமணமாகாத மைனர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கைதான அப்பாவி இளைஞர் 90 நாட்களாக சிறையில் இருந்துள்ளார். இந்நிலையில் மற்றொருவரை கைது செய்து விசாரிப்பதுடன் டிஎன்ஏ டெஸ்ட் நடத்த ஏற்பாடு நடக்கிறது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சில்லத்தூர் வெட்டிக்காட்டை சேர்ந்தவர் மஞ்சுளா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமாகாத இவர் கர்ப்பமாக இருந்ததை அவரது பெற்றோர் கண்டுபிடித்தனர். இதற்கு காரணம் யார் என்று பெற்றோர் கேட்டபோது, அதே ஊரை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை காண்பித்தார். ஆனால் அவரோ நான் காரணமில்லையென மறுத்தார். ஆனாலும் மஞ்சுளா புகாரின்படி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் ஆனந்தராஜை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே மஞ்சுளாவுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு யார் தந்தை என்பதை நிரூபிக்க டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. இதற்காக குழந்தையின் ரத்தமும், ஆனந்தராஜின் ரத்தமும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தைக்கு தந்தை ஆனந்தராஜ் இல்லை என்பது உறுதியானது. இதற்கிடையே 90 நாள் சிறையில் இருந்த ஆனந்தராஜ் ஜாமீனில் வெளியே வந்தார். மீண்டும் மஞ்சுளாவை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது குழந்தைக்கு தந்தையென பாச்சூரை சேர்ந்த பால்ராஜ் என்று கூறினார்.

அவர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைக்கு தந்தையாவார். பலமுறை பலாத்காரம் செய்த அவர், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று கூறியதால் ஆனந்தராஜை கூறிவிட்டதாக மஞ்சுளா கூறியுள்ளார். அதன்பேரில் பால்ராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பால்ராஜிக்கும் டிஎன்ஏ சோதனை நடத்த ஏற்பாடு நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Oorathnadu , 17-year-old girl, child, father, chaos, jail, innocent youth, DNA test
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...