×

சென்னையில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 31 சவரன், 4.75 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னையில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 31 சவரன் நகை மற்றும் 4.75 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்  தேடி வருகின்றனர். சைதாப்பேட்டை மருத்துவமனை சாலையை ேசர்ந்தவர் சந்துரு (53). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 27ம் தேதி சிதம்பரத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கிருந்து நேற்று அதிகாலை சந்துரு குடும்பத்துடன் சென்னை வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே ெசன்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 11 சவரன் நகை மற்றும் 3 லட்சம், விலை உயர்ந்த 3 லேப்டாப்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

* கொளத்தூர் வேலவன் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (55). நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர் குடும்பத்துடன் வெளியில் சென்று, வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 20 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.
* வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டன் 1வது தெருவை சேர்ந்தவர் முகமது அலி (40). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சபாகன் அலி (35). இவர், கடந்த 10ம் தேதி அங்குள்ள வங்கியில் 1 லட்சத்து 75 ஆயிரத்தை எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர், பணத்தை பீரோவில் வைத்தார். நேற்றுமுன்தினம் பீரோவை திறந்து பார்த்தபோது பணம் மாயமானது தெரிந்தது. மேற்கண்ட சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : houses ,Chennai ,robbery , Breaking the lock, 3 houses in Chennai, 31 sovereigns ,4.75 lakh robbery
× RELATED கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம்