×

புல்வாமா, பதன்கோட், உரி தாக்குதலின்போது எங்கே போனீங்க? திக்விஜய் சிங் கேள்வி

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், போபால் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான திக் விஜய் சிங், அசோகா கார்டன் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி நாட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகளை வேட்டையாடிதாக கூறுகிறார். புல்வாமா, பதன்கோட், உரி போன்ற இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தபோது அவர் எங்கிருந்தார் என்று தெரியவில்லை. இதுபோன்ற தாக்குதல்களை நம்மால் ஏன் தடுக்க முடியவில்லை. நாட்டில் மத நல்லிணக்கத்துடன் மக்கள் சகோதரரர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் பாஜவினர் குறிப்பிட்ட மதத்தினரை வேறுபடுத்தி பார்க்கின்றனர். எனவே மதத்தை விற்கும் நபர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

போபால் ெதாகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடும் பாஜ வேட்பாளரான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது சாபமிட்டிருந்தால், ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது. கடந்த வாரம் ஒரு கருத்து தெரிவித்த பிரக்யா சிங் தாக்கூர், தான் சாபமிட்டதால்தான் மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரே இறந்தார் என்று சொன்னார். பின்னர் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தனது பேச்சிற்கு சாத்வி பிரக்யா சிங் மன்னிப்பு கோரினார். எனவே, பாஜவினரிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pulwama ,Pathankot ,attack ,Digvijay Singh , Pulwama, Pathankot, Raja, Digvijay Singh
× RELATED புல்வாமாவில் என்கவுன்டர் தீவிரவாதி சுட்டு கொலை