×

சர்வதேச சுற்றுலா தலத்தில் உயிர்ப்பலி வாங்க துடிக்கும் தடுப்பு சுவர்: கோடை விடுமுறைக்குள் சீர்செய்யப்படுமா?

கன்னியாகுமரி:சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு கோடை விடுமுறையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். முக்கடல் சங்கமத்தில் குளிக்கும் இவர்கள் கடற்கரையில் அமர்ந்து இயற்கையை ரசிக்கின்றனர். முக்கடல் சங்கமத்தில் சூரியன் உதயம், மறைவை பார்க்க முடியும் என்பதால் ஏராளமானோர் காலை மாலை வேளையில் இங்கு அமர்கின்றனர். ஆனால் முக்கடல் சங்கமம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு வசதியாக இருக்கை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள அலை தடுப்பு சுவரில் அமர்ந்து இயற்கையை ரசிக்கின்றனர். தினமும் காலை மாலை வேளையில் குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் அமர்ந்து இருப்பது வழக்கம். அரசால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் இந்த சுவர் தான் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடலின் சீற்றம் காரணமாக தடுப்பு சுவரில் அலைமோதி மண் அரிப்பு ஏற்படுகிறது. தடுப்பு சுவருக்கு அடிப்பகுதியில் உள்ள மண் அரிக்கப்படுவதால் தடுப்பு சுவரின் உள் பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த தடுப்பு சுவரின் அருகில் சுமார் 10 ஆழ பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பு சுவர் எந்த ேநரத்திலும் இடிந்து விழும் அபாயம் உருவாகி உள்ளது. முக்கடல் சங்கமத்தை பராமரித்து வரும் இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இந்த பேராபத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது. தடுப்பு சுவர் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் தடுப்பு சுவரை சீர் செய்ய வேண்டும்.

இதுபோல் பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இருக்கைகள், குடிநீர், வெயிலை சமாளிக்க ஓய்வறை என எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுேபால் சன்னதி தெருவில் நீதிமன்ற உத்தரவுபடி ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ஆக்ரமிக்கப்பட்டு அங்கு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறது.  எனவே கோடை விடுமுறையில் வரும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக முக்கடல் சங்கமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அதோடு, உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் தடுப்பு சுவரை சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சன்செட்டில் செல்பி
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் கடல் அலையை பின்னணியாக கொண்டும், சூரியன் உதயம், மறைவை பின்னணியாக கொண்டும் செல்பி எடுக்கின்றனர். இதுபோல் அலைகளுக்கு மத்தியில் ஒய்யாராக காட்சியளிக்கும் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மணி மண்டபத்தையும் செல்பியில் பதிவு செய்கின்றனர். இந்த வகையில் நேற்று வந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் சூரியன் அஸ்தமனத்தை பின்னணியாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Summer Vacations ,International Tourist Places , International tourist attraction, vacation mud, summer vacation
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...