×

குண்டு வெடிப்பில் தொடர்பா? வேதாரண்யத்தில் சிக்கியவரிடம் விசாரணை

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கடற்கரை கிராமங்களில் இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்களின் எதிரொலியாக கடந்த 6 நாட்களாக தீவிர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. இந்நிலையில் கீழையூர் காவல் சரகம் விழுந்தமாவடி தென்பாதி சோதனை சாவடி அருகே நேற்று வாலிபர் ஒருவர் பஸ்சிருந்து இறங்கி  உள்ளார். சந்தேகப்படும்படியாக இருந்த அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த செய்யது குத்புதீன் (45) என்பது தெரியவந்தது. இவர் எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bomb explosion ,Investigation ,Vedaranyam , Contact Vedaranyam, inquiry
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...