×

கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் 100 இளம்பெண்களை சீரழித்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது: லாட்ஜில் போலீஸ் விசாரணை

ஈரோடு: பொள்ளாச்சியை தொடர்ந்து ஈரோட்டிலும் கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய ரியஸ் எஸ்டேட் அதிபர் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும், அந்த நபர் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை சீரழித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த 21 வயது பெண், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2015ல் பி.எஸ்.சி. தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் ஈரோடு, வில்லரசம்பட்டியை சேர்ந்த, திருமணமாகி 2 குழந்தை உள்ள ராதாகிருஷ்ணன்(37) என்பவர் நட்பாக பழகினார்.

தனது பிறந்தநாளுக்கு விருந்து கொடுப்பதாக கல்லூரி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு காரில் அழைத்து சென்றார். அப்போது ஆபாச படங்களை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டு, அதனை செல்போனில் படம் எடுத்துள்ளார். பின்னர் அதை காட்டி இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டி அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து அவரை மிரட்டி ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே லாட்ஜில் அறை எடுத்து பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமடைந்த கல்லூரி மாணவியை, காரில் வைத்து தாலி கட்டி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். பின்னர் மீண்டும் கடந்த ஜனவரி மாதம் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவியை தனது நண்பர்களின் ஆசைக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டி வந்தார். இதனால் பயந்து போன அந்த பெண் ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ரியல் எஸ்டேட் அதிபரான ராதாகிருஷ்ணனை, பலாத்காரம், கொலை மிரட்டல், ஆபாச படம் எடுத்து மிரட்டுவது, கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நேற்று இரவு கைது செய்தனர்.

விசாரணையில், ராதாகிருஷ்ணன் மேலும் சில கல்லூரி மாணவிகளை இதே போல பாலியல் தொல்லை கொடுத்து, சீரழித்தது தெரியவந்துள்ளது. ஈரோட்டில் அவரால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, போலீசில் புகார் அளிப்பதாக கூறிய போது, ராதாகிருஷ்ணன் தகாத வார்த்தையால் திட்டி, உன்னை போல் நான் 100க்கும் மேற்பட்ட பெண்களை இந்த லாட்ஜிக்கு அழைத்து வந்துள்ளேன். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ராதாகிருஷ்ணன் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் என 100க்கும் மேற்பட்டவர்களை மிரட்டி உல்லாசமாக இருந்திருக்க கூடும் என்பதால் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது செல்போன்கள், லேப்டாப்களில் ஆபாச படங்கள் உள்ளதா என போலீசார் ஆய்வு செய்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவரது தந்தை பெயரில் புகார் பெறப்பட்டு, அவரது வீட்டிற்கே போலீசார் மப்டியில் சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் வாகனத்தில் செல்லாமல் ஆட்டோவில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே ராதாகிருஷ்ணன் அறை எடுத்தும் தங்கும் லாட்ஜில் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அந்த லாட்ஜில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் பெண்கள் எண்கள்: பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் இருந்த அவரது தோழிகளின் செல்போன் எண்களை ராதாகிருஷ்ணன் திருட்டுத்தனமாக கைப்பற்றி அவர்களுக்கும் போன் மூலம் தொல்லை கொடுத்துள்ளார். ராதாகிருஷ்ணனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் 600 எண்கள் சேமித்து வைத்திருந்ததாகவும், அதில் பாதி எண்கள், பெண்கள் தொடர்பானவை என்பதும் தெரியவந்தது.

யார் இந்த ராதாகிருஷ்ணன்: ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம். என்பவரது மகன்தான் ராதாகிருஷ்ணன். ஆறுமுகத்திற்கு சொந்தமாக வில்லரசம்பட்டி, பெரியவலசு உள்ளிட்ட ஈரோட்டின் முக்கிய பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு, வீடுகள், காலி இடங்கள் உள்ளன. இதில் குறிப்பாக அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால், வாடகை பணத்தை ஆறுமுகத்தின் மகன்களான சிவசங்கர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆடம்பரமாக செலவழித்துள்ளனர்.

சிவசங்கர் அடிக்கடி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அடிதடி தகராறில் ஈடுபட்டதாக அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராதாகிருஷ்ணன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2007ல் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் கம்பெனி நடத்தியுள்ளார். அப்போது அங்கு வேலை பார்க்கும் பெண்களை அவரது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். பின்னர் நஷ்டம் ஏற்பட்டதால் அதை மூடிவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளார்.

காதல் திருமணம் செய்த மனைவியை ஏமாற்றினார்

ராதாகிருஷ்ணன் கடந்த 2008ல் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தியபோது, அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பிருந்தாதேவி என்ற பெண்ணை காதலித்து, கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை ஏமாற்றி விட்டு, ஈரோட்டிற்கு வந்து செட்டில் ஆனார். இதனைத்தொடர்ந்து 2011ல்  பிருந்தாதேவி 2 வயது குழந்தையுடன், அவரது வீட்டின் முன்பு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைத்தனர்.  கடந்த சில ஆண்டுகளாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள் யார், யார்?

ராதாகிருஷ்ணன் கல்லூரி மாணவியை மிரட்டி அவரது நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சித்ததாக தெரிவதால், அவரது நண்பர்கள் யார்? இந்த மிரட்டல் சம்பவத்தில் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா?. ராதாகிருஷ்ணன் பல பெண்களை சீரழித்துள்ளதால், அதில் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Real estate chief ,girls , College student, porn video, blackmail, 100 teenager, real estate chancellor, arrested
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்