×

கெத்து காட்டும் சிஎஸ்கே..... தொடர்ந்து 10-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

சென்னை: 12-வது ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் டி20 தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் துவக்கத்தில் இருந்தே நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதிக்கம் செலுத்திவந்தது. இருப்பினும் கடைசியாக விளையாடிய 4 லீக் போட்டிகளில் 3-ல் தோல்வியடைந்ததால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற நிலை உருவானது.

தற்போது சென்னை அணி 16 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் சென்னை அணி விளையாடிய 10 ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைக்கும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : playoff round , Play-off round, IPL, Chennai Super Kings
× RELATED ராஜஸ்தானை சுருட்டி வீசி பிளேஆப்...