×

வேடசந்தூர் மர்ம மரண வழக்கில் திருப்பம் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொன்றது அம்பலம்: பிளஸ் 2 மாணவன் சிக்கினான்

வேடசந்தூர்: வடமதுரையில் சிறுமி மர்ம மரண வழக்கில் பிளஸ்2 மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சிறுமியை பலாத்காரம் செய்து உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்றது தெரிய வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்த வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. 7ம் வகுப்பு மாணவி. கடந்த 16ம் தேதி பெற்றோர் வெளியே சென்றபோது, வீட்டில் சிறுமி வாயில் மின்வயரை கடித்தவாறும், உடலில் காயங்கள், கீறல்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வடமதுரை போலீசார்,  சிறுமியின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்தனர். ஆனால் பெற்றோர்-உறவினர்கள், மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினர். ேமலும் 21ம் தேதியன்று, ‘வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். எங்களுக்கு அவர்களை தெரியும். போலீசார் நன்கு விசாரிக்காமல் தற்கொலை என்று வழக்குப்பதிவு செய்ய கூடாது. முறையாக விசாரணை நடத்த வேண்டும்’ என கோரி திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்பி சக்திவேலிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து எஸ்பி உத்தரவின்பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நேற்று முன்தினம் சிறுமியின் வீடு எதிரே வசித்து வரும் பிளஸ் 2 மாணவனை கைது செய்தனர்.  விசாரணையில் இவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். பின்னர் மாணவனை திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். 3 பேருக்கு தொடர்பு?: சிறுமி இறப்பில் 3 பேர் சம்பந்தப்பட்டு இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் போலீசார் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர். உறவினர்கள் குற்றம்சாட்டும் மற்ற 2 பேர் பணவசதி படைத்தவர்கள் என்றும், இந்த சிறுவன் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இவரை மட்டும் வற்புறுத்தி வாக்குமூலம் வாங்கி போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி வடமதுரையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : electrician ,Vedasandur , Vedasandur ,death case, A 12 year old ,girl, raped
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது