×

மைசூரு தசரா யானை துரோணா மாரடைப்பால் சாவு

மைசூரு: கர்நாடகா மாநிலம், மைசூருவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக புகழ்பெற்ற தசரா விழாவில் கடந்த மூன்று முறை துரோணா  (39) யானை கலந்து கொண்டது. இந்த யானை நாகரஹொலே தேசிய வனவிலங்கு  பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் மத்திகோடு யானைகள் முகாமில் காட்டு யானைகளுடன் ஏற்பட்ட மோதலில் துரோணாவுக்கு இடுப்பு  பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக, முகாமில் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை திடீர் என்று துரோணாவுக்கு  மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், கீழே விழுந்த துரோணா பரிதாபமாக உயிரிழந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mysore , Mysore, Dusara, Elephant, Drona, Death
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...