×

மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை: மாயாவதி கருத்து

மோடி அரசு, மீண்டும் ஆட்சிக்கு வருவதை நாட்டு மக்கள் விரும்பவில்லை’ என்று மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். உபி.யின் லக்னோவில் நடந்த பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேசியதாவது: பாஜவின் அறிவிப்புகள், வாக்குறுதிகள் அனைத்துமே வெற்று பேச்சு. மக்களை ஏமாற்றுவதற்கான கண் கட்டி வித்தை. அவர்கள் பொய்களின் களஞ்சியம். பொய்களை கூறியே ஆட்சி நடத்தி வருகின்றனர். அதன் தலைவர்கள் அனைவரும் நம்பர்-1 ஏமாற்றுக்காரர்கள். மக்களின் தேவையை கண்டு கொள்ள மாட்டார்கள்.

பணக்காரர்களின் முன்னேற்றத்திற்காகவே பாடுபடுபவர்கள். ஏழைகளுக்கு எதிரான மோடி அரசு மீண்டும் ஆட்சி அமைப்பதை நாட்டு மக்கள் விரும்பவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜவே ஆளும் நிலையில், உபி.யில் ஏன் வறுமையும், வேலையின்மையும் பின்தங்கிய நிலையும் மாறவில்லை? இந்த கேள்விகளுக்கு மோடி பதில் கூற முடியுமா? மற்றவர்களின் குறைகளை சுட்டிக் காட்டுவதையே வழக்கமாக கொண்டுள்ள பாஜவினர் ஏன் தங்களது குறைகளை பார்ப்பதில்லை? என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Mayawati , Modi, rule, people, do not want, Mayawati
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...