×

ஊழியர்கள், டிரைவர்கள் மோதலின்போது நல்லூர் சுங்கச்சாவடியில் வசூல் பணம் கொள்ளை; வாட்ஸ்அப்பில் பரவும் வீடியோ

சென்னை:  செங்குன்றம் நல்லூர் சுங்கச்சாவடியில் ஊழியர்கள், டிரைவர்கள் இடையே சமீபத்தில் நடந்த மோதலின்போது, மர்ம நபர்கள் வசூல் பணத்தை கொள்ளையடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்குன்றம் நல்லூர் சுங்கச்சாவடியில் கடந்த 24ம் தேதி சுங்க கட்டணம் வசூலிக்கும்போது ஊழியர்களுக்கும், வேன் டிரைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளால் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின்பேரில் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

நேற்று முன்தினம் சோழவரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த தமிழ்செல்வம் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, சம்பவத்தன்று சுங்கச்சாவடியில் நடந்த மோதலின்போது கவுன்டர்களில் கட்டுக்கட்டாக இருந்த வசூல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்லும் வீடியோ நேற்று முதல், வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சிகளை வைத்து சுங்கச்சாவடியில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து சோழவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : video spread ,Nallur Customs Watts , Nallur, Customs, Employees, Drivers, Accounts Payments
× RELATED டிக்டாக்கில் டூயட் பாடியது போலீசா?...