ஸ்டட்கர்ட்: ஜெர்மனியில் நடந்து வரும் போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். கால் இறுதியில் அனஸ்டேசியா செவஸ்டோவாவுடன் (லாத்வியா) நேற்று மோதிய குவித்தோவா 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.
பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர் 6-2, 6-3 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அரை இறுதிக்கு முன்னேறினார். கடந்த 8 ஆண்டுகளில் குவித்தோவா முதல் முறையாக செவஸ்டோவாவை வீழ்த்தி உள்ளார். மற்றொரு கால் இறுதியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 4-6, 7-6 (7-4) என்ற செட்களில் டோனா வேகிச்சை (குரோஷியா) வீழ்த்தினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி