×

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஸ்டெய்ன்...... பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு?

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்த தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி முதல் 6 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் அந்த அணியின் மோசமான பந்துவீச்சு தான். இதனையடுத்து அந்த அணியில் ஸ்டெய்ன் சேர்க்கப்பட்டார். பின்னர் விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இனிவரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் பெங்களூரு அணி உள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக ஸ்டெய்ன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட காயம்  காரணமாக டேல் ஸ்டெய்ன் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என பெங்களூர் கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதேபோல் இங்கிலாந்து வீரர் மொயின் அலி பாகிஸ்தான் தொடரில் பங்கேற்பதற்காக நாடு திரும்பியுள்ளார். முக்கிய வீரர்கள் இருவர் நாடு திரும்பியதால் பெங்களூரு அணி இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Steyn ,IPL , IPL 2019, Royal Challengers Bangalore, Dale Steyn, injury
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி