ஜெனீவா: இலங்கை பேரினவாத அரசே தாக்குதலின் சூத்திரதாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது என்று தமிழர் இயக்கம் கூறியுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஜெனீவாவில் உள்ள தமிழர் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழர்கள் இனவிடுதலை போராட்ட கோரிக்கையை திசை திருப்ப இந்த தாக்குதல் பயன்படுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக கூறியுள்ளது. சிங்களபுத்த அடிப்படைவாதிகள் செல்வாக்கில் இயங்கும் அரசால் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள முடியாது என்று தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி