×

காவிரி ஆற்றில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் எச்சரிக்கை பலகைகளை வைத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்: அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: காவிரி ஆற்றில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள டிடிவி.தினகரன், எச்சரிக்கை பலகைகளை வைத்து உயிரிழப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி ஜோதிமணி, குழந்தைகள் தீபக்கேசன், தாரகேசன் மற்றும் ஜோதிமணியின் தோழி தேவி ஸ்ரீ , அவரது மகள் அஸ்விகா ஆகியோர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

புகளூரிலுள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கு தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக ஆழமாக வெட்டப்பட்ட வாய்க்கால் இருந்தது தெரியாததால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. இதுபோன்ற ஆபத்து நிறைந்த  பகுதிகளில் பொதுமக்களுக்கு தெரியும்படி எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை. அதனை உடனடியாக செய்து எதிர்காலத்தில் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாதவாறு தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : deaths ,mourning boards ,Cauvery River , Cauvery river, death, mourning, warning TDV
× RELATED கோட்டா பயிற்சி மையத்தில் படித்த...