×

பொள்ளாச்சி போல் குமரியில் கொடூரம்: மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

குமரி: பொள்ளாச்சி போல் கன்னியாகுமரியிலும் பாலியல் கொடூரம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், பேஸ்புக்கில் தனது புகைப்படத்தையும், கருத்துகளையும் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். பேஸ்புக்கிலேயே மூழ்கிக் கிடந்த அவருக்கு குமரி மாவட்டம் ஆவரைக்குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஏசுநேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னைப் பற்றி அந்தப் பெண்ணிடம் எதுவும் கூறவில்லை என்று சொல்லப்படுகிறது.

இருவரும் பேஸ்புக் மூலம் பழக்கத்தை வளர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து மெல்ல மெல்ல தன்னைப் பற்றிய உண்மைகளை அந்தப் பெண்ணிடம் கூறிய ஏசுநேசன், காதலை வெளிப்படுத்தியுள்ளான். அதற்கு முதலில் அந்தப் பெண் மறுத்ததாகவும், ஏசுநேசனின் தொடர் வற்புறுத்தல் காரணமாக ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன், நேரில் சந்திக்க வேண்டும் எனக் கூறி அந்தப் பெண்ணை காரில் ஏசுநேசன் அழைத்துச் சென்றுள்ளான். காரை அவனது நண்பன் ஆதீஷ் என்பவன் ஓட்டியுள்ளான்.

ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே காரை நிறுத்தி விட்டு காட்டுக்குள் அந்தப் பெண்ணை, ஏசுநேசன் கூட்டிச் சென்றுள்ளான். விபரீதம் அறியாமல் சென்ற அப்பெண்ணை வாயை துணியால் மூடி, ஏசுநேசனும், ஆதீசும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. நகைகளையும் பிடுங்கி விட்டு அப்பெண்ணை அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். வீட்டில் நகைகளைப் பற்றிக் கேட்ட போது, நடந்தவற்றைக் கூறி அப்பெண் அழவே, நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து ஏசுநேசனையும், ஆதீசையும் கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பொன்று கன்னியாகுமரியிலும், அரங்கேறியுள்ளது. குமரி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,detainee ,Kumari , Pollachi, Kumari, detaineer, Paxo Act, arrested
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு