×

கொழும்பு அருகே வெல்லம்பிட்டியில் வெடிகுண்டு ஆலை கண்டுபிடிப்பு : உரிமையாளர் உட்பட 6 பேர் கைது

கொழும்பு : இலங்கையில் கொழும்பு அருகே வெல்லம்பிட்டியில் வெடிகுண்டு ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் உயிரிழந்துள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் நேற்று வரை 310 பேர் உயரிழந்திருந்த நிலையில், தற்போது பல எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவாலயங்கள், சொகுசு உணவகங்களில் நடந்த இந்த தாக்குதலில் 45 குழந்தைகள் உட்பட பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்னும் இயக்கம் காரணம் என இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகள் இலங்கையில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதனையடுத்து இலங்கை முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கொழும்பு அருகே வெல்லம்பிட்டியில் சந்தேகப்படும் வகையில் தொழிற்சாலை இயங்கி வருவதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு நடத்திய சோதனையில் அங்கு ஏராளமான வெடி பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 160 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வானாத்தவில்லு என்ற இடத்தில் 75 ஏக்கர் தென்னந்தோப்பில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி பெற்றுள்ளதாகவும், அங்கு நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் பயிற்சி பெற்ற பட்டியல் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Explosion plant ,Wellampitiya ,Colombo ,owner , Sri Lanka, Colombo, bomb plant, arrested
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்