×

தேர்தலில் பணப்பட்டுவாடா ஆலோசனை அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக ஆலோசனை செய்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் தொகுதி அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ஆலங்காயம் கல்லரைப்பட்டி கிராமத்தில் கடந்த 14ம் தேதி தேர்தல் பிரசாரம் நடந்தது. அப்போது, ஒரு புளியமரத்தடியின்கீழ், வாணியம்பாடி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது குறித்து தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.  இந்த வீடியோ பதிவு, பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, கோவி.சம்பத்குமார் மீது வாணியம்பாடி தாலுகா போலீசில், தாசில்தார் முருகன் கடந்த 17ம் தேதி புகார் செய்தார். இது, தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டது என்பதால் வாணியம்பாடி நீதிபதி கலைமுத்துசெல்வனிடம் போலீசார்  அனுமதி பெற்றனர். பின்னர், 3 பிரிவின்கீழ் கோ.வி.சம்பத்குமார் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA , Former MLA
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...