×

மேற்கு வங்கத்தில் வாக்குபதிவின் போது மோதல்: வாக்காளர் ஒருவர் உயிரிழப்பு... 7 பேர் படுகாயம்

டெல்லி: மேற்கு வங்கத்தில் வாக்குபதிவின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி வாக்காளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 117 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 11ம் தேதியும் 91 தொகுதிகளிலும், 2ம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

இதைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், கோவா, ஒடிசா, சட்டீஸ்கர், அசாம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முர்ஷிதாபாத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் வாக்குபதிவின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி வாக்காளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Confrontation ,Voter deaths ,West Bengal , West Bengal, polling, conflict, electoral death
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!