×

பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..... ரிக்டரில் 6.6 ஆக பதிவு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. இதனால் மக்கள் அலறியடித்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளது. ‘நெருப்பு வளையம்’ எனப்படும் மிக ஆபத்தான பகுதியில் இந்த நாடு அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கத்தினால் பாதிக்கப்படுகிறது.

முன்னதாக பிலிப்பைன்சின் லுசான் தீவில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் இது 6.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை பிலிப்பைன்சின் சமர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க மையம்  தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : earthquake ,Philippines , Earthquake, Philippines, Manila
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்