×

பாலியல் குற்றச்சாட்டு புகாரில் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் தலைமை நீதிபதிக்கு ஆதரவு

புதுடெல்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரில், அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக உச்ச நீதிமன்ற ஊழியர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்து தரம் தாழ்த்தி கொள்ள விருப்பமில்லை என்று தலைமை நீதிபதி கருத்து  தெரிவித்திருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர் நலச் சங்கம் நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பாக அது வெளியிட்ட தீர்மானத்தில், `தலைமை நீதிபதி மீது ஜோடிக்கப்பட்ட, புனையப்பட்ட இந்த  குற்றச்சாட்டிற்கு உச்ச நீதிமன்ற ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

நீதித்துறை அமைப்பின் மீது களங்கம் விளைவிக்கவே இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில்,  குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் ஊழியர்கள் சங்கம் நீதித்துறை, தலைமை நீதிபதிக்கு உறுதுணையாக நிற்கும் என்று கூறப்பட்டுள்ளது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் டெல்லி வீட்டில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், கடந்த அக்டோபரில் நடந்ததாக கூறிய பாலியல் குற்றச்சாட்டு நீதித்துறையும், தலைமை நீதிபதியையும்  ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : staffers ,Supreme Court , Sexual, Supreme Court ,staff ,Chief Justice
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...